நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது,
“உலகத்தில் இருக்கின்ற நல்ல நாடுகளில் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வினை காண முடியும். ஆனால் எமது நாட்டில் அவ்வாறு மாற்றியமைக்க முடியாது.
இதற்கு காரணம் இங்கு திருட்டு மற்றும் ஊழல் செயற்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றது.
அந்தவகையில் எமது நாட்டினை மாற்றியமைக்க வேண்டுமாயின், முதலில் இந்த செயற்பாடுகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(தினக்குரல்)