உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தவிசாளர்

(றிஸ்வான் சாலிஹு)

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத், ஹிதாயாபுரம் வட்டாரத்திற்கான தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த கடிதத்தினை பிரதேச சபையின் செயலாளரிடம் இன்று (28) திங்கட்கிழமை கையளித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று அவர் தவிசாளராக பதவி வகித்து, தன்னால் முடியுமான சேவைகளை பொத்துவில் மண்ணுக்கு நிறைவேற்றினார்.

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் பொத்துவில் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியதோடு அதன் தவிசாளராகவும் வாஸீத் பதவி வகித்தார். இருந்த போதிலும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் வருகையை தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த தற்போதைய தவிசாளர் எம்.எச்.றஹீம் மற்றும் இன்னும் சில உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்ததை அடுத்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் பதவி நீக்கப்பட்டதையடுத்து அவர் உறுப்பினராகவே பதவி வகித்தார்.

இவர், இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தவிசாளர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தவிசாளர் Reviewed by Editor on February 28, 2022 Rating: 5