தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைக்க விண்ணப்பம் கோரல்

(றிஸ்வான் சாலிஹு)

பயிலுநர் வேலைத்திட்டத்தின் கீழ் 2018/2019/2020ஆம் வருடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களை தேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதால் அது தொடர்பான விண்ணப்பங்களை கோறும் பணி இணைய (Online) வழி ஊடாக மேற்கொள்ள கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக dorec.moe.gov.lk ஊடாக கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து 2022.03.01 திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைக்க விண்ணப்பம் கோரல் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைக்க விண்ணப்பம் கோரல் Reviewed by Editor on March 01, 2022 Rating: 5