கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (07) திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க அவர்கள், கேகாலை மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துசித்த பி. வனிகசிங்க மீண்டும் பிரதம செயலாளராக நியமனம்
Reviewed by Editor
on
February 07, 2022
Rating: