(எம்.பஹ்த் ஜுனைட்)
இலங்கை திருநாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தினால் "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் தொனியில் மாபெரும் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை (06) காத்தான்குடி மட்/மம/ மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.ஜாபிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் தள வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பாளர் வைத்தியர் பிரபா சங்கர் மற்றும் போரத்தின் உப தலைவர் எம்.எஸ்.எம்.கையும், செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உள்ளிட்ட போரத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அதிகளவான பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.