காதர் எம்.பி தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முசலி பிரதேச செயலகப் பிரதேச செயலாளர் திரு. ரஜீவ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (02) இடம்பெற்றது.

இவ்ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசவாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் சுகாதாரம், கல்வி, விவசாயம்,  நீர்பாசனம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம், முப்படைகள் சம்பந்தமான பிரச்சனைகள், உள்ளுராட்சி மன்றங்கள், கூட்டுறவு, சுற்றுச் சூழல், மீன் பிடி, விலங்கு உற்பத்தி, கட்டிடத் திணைக்களம், காணிப் பிரச்சினைகள், போக்குவரத்து, சமூர்த்தி,  வீதி அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை சம்பந்தமான போன்ற திணைக்களங்கள் சம்பந்தமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. செல்வம் அடைக்கலநாதன், கௌரவ .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ. விணோ நாகரதலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு  அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.






காதர் எம்.பி தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காதர் எம்.பி தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Reviewed by Editor on February 02, 2022 Rating: 5