(எம்.என்.எம்.அப்ராஸ்)
சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் (PCA) அனுசரணையில் இயங்கி வரும் அம்பாறை மாவட்ட இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் நல்லிணக்கப்பயிற்சி பட்டறை பதியத்தலாவையில் நேற்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கல்முனை, கல்முனை வடக்கு , நாவிதன்வெளி , மஹாஓயா , பதியத்தலாவ, தெஹியத்தக்கண்டி ஆகிய பிரதேச செயலக பிரிவில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக் கூடிய வாய்ப்புகள் மற்றும் சமுக நீதி , சமத்துவத்துவ நல்லிணக்க முன்னெடுப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இவ்நல்லிணக பயிற்சிப் பட்டறையில் சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி. இராஜந்திரன், சமாதான சமுக பணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே. டி. ரோகிணி , எச். எஸ். ஹசனி, டப்ளியு .எம் .சுரேகா எம்.எல்.ஏ.மாஜீத், பிரதேச இளைஞர் நல்லிணக்க மன்றங்ககளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.