ஆரையம்பதியில் இடம்பெற்ற SJBயின் மக்கள் சந்திப்பு

(றிஸ்வான் சாலிஹு)

ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் திரு ரீ.தயானந்தன் அவர்களின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மக்கள் சந்திப்பு இன்று (16) புதன்கிழமை காலை ஆரையம்பதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் மற்றும் புத்திக பதிரண, NFGG கட்சியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான், ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் திரு.சியாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்கால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விசேட உரையாற்றியதோடு, இம்மக்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









ஆரையம்பதியில் இடம்பெற்ற SJBயின் மக்கள் சந்திப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற SJBயின் மக்கள் சந்திப்பு Reviewed by Editor on February 16, 2022 Rating: 5