தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின், அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இன்று (08) செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணியிலிருந்து நாளை (09) புதன்கிழமை காலை 6.00 வரை நீர் வழங்கல் தடை செய்யப்பட்டிருக்கும் என்று அம்பாறை நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், அக்கறைப்பற்று முதல் கல்லாறு வரையிலான கரையோர பிரதேசங்கள், சம்மாந்துறை, அம்பாரை, அம்பாறை நகர் பகுதி, வலத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம், மல்வத்தை போன்ற பகுதிகளில் நீர் துண்டிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர்ப்பாவனையாளர்கள் நீரினை சேகரித்து வைத்துக் கொள்வதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகலமைப்புச் சபையின் அம்பாறை காரியாலயம் கேட்டுக்கொள்கின்றது.