நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் காமினி லொகுகே

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் கேன்களில் எரிபொருளை நிரப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை ஏற்றிய பின்னர் பல கேன்களில் எரிபொருளை நிரப்புகிறார்கள். இதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள வாகன தொட்டிகளில் நிரப்ப போதுமான எரிபொருள், விரைவாக தீர்ந்து, தட்டுப்பாடு ஏற்படுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறைந்தது ஒரு பவுசர் எரிபொருள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெற்றோல் அல்லது டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் லொகுகே இதன் போது தெரிவித்துள்ளார்.



நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் காமினி லொகுகே நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் காமினி லொகுகே Reviewed by Editor on March 08, 2022 Rating: 5