(றிஸ்வான் சாலிஹு)
விளையாட்டுத் திறன்களைக் கொண்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் கிராமிய மட்டத்தில் தோற்றம் பெறுவார்களாயினும், அவர்களின் திறன்களை இனங்காணுவதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் பொருத்தமான முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்படாமையினால் விளையாட்டு வீர வீராங்கனைகள் போட்டித் தன்மையுடன் கூடிய விளையாட்டுக்களில் முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை அவதானிக்கப்பட்டுள்ளது அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாடு முழுவதும் பரந்து வதியும் இயற்றிறன்களால் நிறைந்த பிள்ளைகளை இனங்கண்டு , விஞ்ஞான முறைமைகளுக்கு ஏற்ப தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை இலக்காகக் கொண்டு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அமுல்படுத்தப்படும் திறன்களை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டத்தினை நாடு முழுவதும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஷேட தேவையுடைய விளையாட்டு வீர வீராங்கனைகள் மீதும் விஷேட கவனத்தினைச் செலுத்துதப்படவுள்ளது. இது மூன்று கட்டங்களாக இத்தெரிவு நடைபெறவுள்ளது.
01. முதலாவது கட்டம் - கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம்
02.இரண்டாவது கட்டம் -பிரதேச செயலகப் பிரிவு மட்டம்
03. மூன்றாவது கட்டம் - மாவட்ட மட்டம்
மேற்படி ஒவ்வொரு கட்டத்தின் கீழ் 16 வயது தொடக்கம் 24 வயது வரையிலான விளையாட்டு வீர வீராங்கனைகள் இனங்காணப்படவுள்ளனர்.
இதனடிப்படையில் அடடாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுகளுக்கான வீர வீராங்கனைகளை தெரிவுப் பரிசோதனைகள் பின்வரும் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
2022.03.06 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.00 மணிக்கு அட்டாளைச்சேனை பொது விளையாடு மைதானத்திலும், 2022.03.08 (செவ்வாய்க்கிழமை) காலை 08.00 மணிக்கு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்திலும், 2022.03.10 (வியாழக்கிழமை) காலை 08.00 மணிக்கு ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலை மைதானத்திலும் நடைபெறும் என்று விளையாட்டு உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இம்முதலாம் கட்டத் தெரிவில் உரிய பிரதேசத்தில் விளையாட்டில் ஈடுபட்டுள்ள 16 வயது தொடக்கம் 24 வயது வரையிலான விளையாட்டு வீர , வீராங்கனைகளை பங்குபற்றி பயன் பெருமாறு வேண்டிக் கொள்வதோடு, இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உங்களது பிரிவு கிராமசேவை உத்தியோகாத்தர் அல்லது இளைஞர் சேவை உத்தியோகத்தர் அல்லது விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.