ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.எம்.ஜுனைட் சேர் காலமானார்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று-01, பட்டினப் பள்ளிவாயல் மஹல்லவை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜுனைட் சேர் இன்று (07) திங்கட்கிழமை அதிகாலை காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அக்கரைப்பற்று அஸ்- ஸிறாஜ் மகா வித்தியாலத்தின் (தேசிய பாடசாலை) அதிபராக பல வருட காலம் சேவையாற்றி, பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக விளக்கிய ஓர் கல்விமான்  இவராகும்.

இவர் டாக்டர் நெளபல் ஜூனைட், கணக்காளர் இர்பான் முஹம்மட் ஜூனைட், ஆசிரியை றிப்கா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 9.00மணிக்கு அக்கரைப்பற்றில் நடைபெறும்.



ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.எம்.ஜுனைட் சேர் காலமானார் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.எம்.ஜுனைட் சேர் காலமானார் Reviewed by Editor on March 07, 2022 Rating: 5