தேசிய கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் இலங்கை வந்தடைந்தது

மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸ் அவர்களின் பூதவுடல் இன்று (3) வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வந்தடைந்தது.

அவருடைய பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும்  சனிக்கிழமை (05)மன்னார் மாவட்டத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட உள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (07) இவரின் பூதவுடல் மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி முழங்காவில் போன்ற இடங்களில் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கால்பந்தாட்ட வீரர்கள் வாகன பவனியாக வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





தேசிய கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் இலங்கை வந்தடைந்தது தேசிய கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் இலங்கை வந்தடைந்தது Reviewed by Editor on March 03, 2022 Rating: 5