இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்கியை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (3) வியாழக்கிழமை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எழுதிய ‘We Are a Apart Not Apart’ என்ற நூலையும் உயர்ஸ்தானிகரிடம் கையளித்தார்.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மெளலானாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உயர்ஸ்தானிகரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
Reviewed by Editor
on
March 03, 2022
Rating: