அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்கள்

வெல்லவாய நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற  இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரையும் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்கள் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்கள் Reviewed by Editor on March 01, 2022 Rating: 5