சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிரதியதிபர் எம்.எம்.எம். நிசார்டீன்

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக சேவையாற்றி தடம் பதித்த ஆசிரியர் எம்.எம்.எம். நிசார்டீன் அவர்கள் (இ.அ.சே.-1) ஓய்வு பெற்றுச் சென்றதை கௌரவிக்கும் வகையில்  பாடசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்த நிகழ்வு கடந்த புதன்கிழமை (16) மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

சுமார் 30 வருடகால தனது சேவைக்காலத்தில் 9 வருடங்கள் பிரதி அதிபராக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலைலை) மற்றும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலும் சிறந்த முறையில் சேவையாற்றி பல சாதனைகளைப் படைத்தவர் இவராவார்.

ஆசிரியர் எம்.எம்.எம். நிசார்தீன் அவர்களின் சேவையை அதிபர், முகாமைத்துவக் குழுவினர்,  பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் உட்டபட அனைவரும் பாராட்டி பொன்னாடையும் போர்த்திக் கௌரவித்தனர்.




சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிரதியதிபர் எம்.எம்.எம். நிசார்டீன் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிரதியதிபர் எம்.எம்.எம். நிசார்டீன் Reviewed by Sifnas Hamy on March 19, 2022 Rating: 5