பதவியை விட மனச்சாட்சியே முக்கியம் - உதய கம்மன்பில

(றிஸ்வான் சாலிஹு)

நேற்று (03) வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனது பதவி நீக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

“அமைச்சராக பதவி வகிப்பதை விட தெளிவான மனச்சாட்சியுடன் இருப்பதே சிறந்தது“ எனவும் நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறித்து எந்தவித கவலையடைவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மைக்காக தான் எப்போதும் தியாகம் செய்ய தயார் என முன்னரே தெரிவித்திருந்தேன் எனவும், பதவிகளை இழந்தவர்கள் மக்களின் நன்மைக்காக தாங்கள் போராடியது குறித்து கவலையடைப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை விமர்சித்து கருத்து கூறியதை அடுத்தே அவர் பதவி நீக்கப்பட்டதாக பரவலாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




பதவியை விட மனச்சாட்சியே முக்கியம் - உதய கம்மன்பில பதவியை விட மனச்சாட்சியே முக்கியம் - உதய கம்மன்பில Reviewed by Sifnas Hamy on March 04, 2022 Rating: 5