தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார சங்கங்கள்

இன்று (02) புதன்கிழமையும், நாளை (03) வியாழக்கிழமையும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.




தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார சங்கங்கள் Reviewed by Editor on March 02, 2022 Rating: 5