ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை இன்று (15) ஆர்ப்பாட்டத்தின் போது எறிந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்ததால் பதற்றநிலை ஏற்பட்டது. மலர்வளையத்துடன் கூடிய பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிந்துள்ளனர்.
ஜனாதிபதி வெளியே வரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டதால் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற எறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
Reviewed by Editor
on
March 15, 2022
Rating: