(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த மஃமூத் லெப்பை இர்ஷாத் அலி, முழு தீவுக்குமான சமாதான நீதவானாக இன்று (18) வெள்ளிக்கிழமை அம்பாறை, மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, கெளரவ லுசாகா குமாரி தர்மகீர்த்தி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தரவு முகாமைத்துவ மற்றும் வணிக நுண்ணறிவு ஆய்வாளராக தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB Bank) தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றும் இவர், Bsc. in Computer Science (UK) இல் தனது பட்டப்படிப்பையும், MSc.in Data Science (University of Peradeniya) இல் தனது பட்டமேற்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.
இவர், அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.