(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று, நகர்ப்பிரிவு-05யைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் முஹம்மது ஜும்றத் அவர்கள் சமாதான நீதவானாக வெள்ளிக்கிழமை (18) அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி, கெளரவ லுசாகா குமாரி தர்மகீர்த்தி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், தேசிய காங்கிரஸ் கட்சியின் பதூர் நகர் வட்டாரத் தலைவராகவும், இப்பிரதேச சிவில் பாதுகாப்பு குழு தலைவராகவும் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார்.
கொவிட் -19 கொரோனா அசாதாரண காலப்பகுதியில் தன்னால் முடியுமான வரை இப்பிரதேச மக்களுக்கு இரவு பகலாக இருந்து உதவிகளை செய்த ஒரு சமூக சேவையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாதான நீதவானாக சமூக சேவையாளர் ஜும்றத் சத்தியப்பிரமாணம்
Reviewed by Editor
on
March 19, 2022
Rating: