நாட்டின் சில பகுதிகளில் திடீர் குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, நாராஹேன்பிட்டி, கிருலப்பனை வெள்ளவத்தை, பத்தரமுல்லை, பெலவத்தை, உடுமுல்லை, ஹிம்புட்டானை ஆகிய பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்குமென நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை
Reviewed by Editor
on
March 18, 2022
Rating: