மார்ச் 31 ஆம் திகதி வரை மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில் அந்தந்த உள்ளூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மின்சாரத்தை சேமிப்பதற்கான மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துமாறு உள்ளூராட்சி தலைவர்களுக்கு நிதியமைச்சர் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
நிலவும் வறட்சியின் காரணமாக நீர்மின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதால் டீசல் ஆலைகளை மின் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது என்றார்.
தெரு விளக்குகளை அணைக்குமாறு நிதியமைச்சர் பணிப்புரை
Reviewed by Editor
on
March 07, 2022
Rating: