சம்பியனான 400 மீற்றர் தடைதாண்டல் வீராங்கனை கௌசல்யா மரணம்

இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சம்பியனான 26 வயதான கௌசல்யா மதுஷானி காலமானார்.

இவர், தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ ஸ்டேடியத்தில் நேற்று (23) நடைபெற்ற 100வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 2022ல், சிறந்த ஹர்ட்லருக்கான குளுக்கோலின் சவால் டிராபியை கெளசல்யா வென்றார்.

சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் தடை ஓட்டத்தை 58.37 வினாடிகளில் கடந்து வென்றார். 26 வயதான அவர், 2019 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் உறுப்பினராக இருந்ததோடு, 400 மீ தடைதாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.





சம்பியனான 400 மீற்றர் தடைதாண்டல் வீராங்கனை கௌசல்யா மரணம் சம்பியனான 400 மீற்றர் தடைதாண்டல் வீராங்கனை கௌசல்யா மரணம் Reviewed by Editor on April 24, 2022 Rating: 5