நடு இரவிலும் தொடந்த காத்தான்குடி இளைஞர்களின் அரச எதிர்ப்புப் பேரணி

(எம்.பஹ்த் ஜுனைட்- காத்தான்குடி நிருபர்)

அரசாங்கத்திற்க்கு எதிராகவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகக் கோரியும் காத்தான்குடி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணி செவ்வாய்க்கிழமை (05) நள்ளிரவு தாண்டியும் பிரதான வீதியில் தொடர்ந்தது.

நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, விலை ஏற்றம் போன்ற நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற பல கோஷங்களுடன் இளைஞர்கள் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.








நடு இரவிலும் தொடந்த காத்தான்குடி இளைஞர்களின் அரச எதிர்ப்புப் பேரணி நடு இரவிலும் தொடந்த காத்தான்குடி இளைஞர்களின் அரச எதிர்ப்புப் பேரணி Reviewed by Editor on April 06, 2022 Rating: 5