ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சின்னமாகக் கருதப்படும் சால்வையை அணியாமல் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (05) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சால்வையின்றி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து சென்றபோது பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “சால்வையால் பயனில்லை. எனக்கு ஆடை வேண்டும்” என்றாராம்.
பின்னர் முன்னாள் அமைச்சருக்கு முன் வந்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் சால்வை இல்லையே என கேள்வி எழுப்பியதற்கு “நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்” எனக் கூறிவிட்டு வெளியேறினார்.
(தினக்குரல்)
சால்வையை மறந்த சமல் ராஜபக்ஷ
Reviewed by Editor
on
April 05, 2022
Rating: