பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்கள் வரை செல்லும் - நிதி அமைச்சர்

நாட்டின் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்க்க முடியும் என கூறினால் நான் பைத்தியகாரன் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (04) புதன்கிழமை விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்கள் வரை செல்லும். வரி அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்கள் வரை செல்லும் - நிதி அமைச்சர் பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்கள் வரை செல்லும் - நிதி அமைச்சர் Reviewed by Editor on May 04, 2022 Rating: 5