திங்கட்கிழமை விசேட அறிக்கை விடுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, அது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்திற்கு அறிவித்துள்ளார்.




திங்கட்கிழமை விசேட அறிக்கை விடுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு திங்கட்கிழமை விசேட அறிக்கை விடுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு Reviewed by Editor on May 06, 2022 Rating: 5