அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தியது தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகரின் கருத்து

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,  இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். 

அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் தனது ட்விட்டர் பக்கத்தினூடாக கேள்வி எழுப்பினார்.




அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தியது தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகரின் கருத்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தியது தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகரின் கருத்து Reviewed by Editor on May 07, 2022 Rating: 5