ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது- பிரதமர்

ஜூன் மாதம் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இருப்பு விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், வரிசைகள் முற்றிலும் குறைக்கப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது- பிரதமர் ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது- பிரதமர் Reviewed by Editor on May 19, 2022 Rating: 5