பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் இன்று (21) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பெற்று வருகின்றனர்.
இந்த வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்ப்பு பிரிவின் பொலிஸ் குழுவொன்று பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் தொடர்பிலும், அவர்களை கலைக்க முற்பட்டமை தொடர்பிலுமே இந்த வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறும் குற்றப்புலனாய்வு
 
        Reviewed by Editor
        on 
        
May 21, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
May 21, 2022
 
        Rating: 
 