பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக வேண்டிய நேரமிது - ஜனாதிபதியின் டுவிட்டர் செய்தி
Reviewed by Editor
on
May 11, 2022
Rating:
