முன்னாள் ஆளுநருக்கு பயணத் தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான அஜித் நிவாட் கப்ரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (24) வியாழக்கிழமை ஆஜராகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய இவர், பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




முன்னாள் ஆளுநருக்கு பயணத் தடை நீடிப்பு முன்னாள் ஆளுநருக்கு பயணத் தடை நீடிப்பு Reviewed by Editor on November 24, 2022 Rating: 5