மொனராகல மாவட்ட பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் ஏ.எம்.எப். அஸ்ரா என்ற மாணவி " ENGLISH DAY COMEPETION- 2022 CURSIVE WRITING போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று , அகில இலங்கை ரீதியில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளார்.
இம்மாணவி இந்த சிறந்த நிலைக்கு வருவதற்கு எம்.எப். றிஸானா ஆசிரியை வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதோடு இவரை பாடசாலை சமூகம் பாராட்டி உள்ளது.
அத்தோடு, தரம் 8 இல் கல்வி கற்கும் எம்.ஆர். மஹீஸா என்ற மாணவி ஊவா மாகாண விஞ்ஞான தினப் போட்டியில், விஞ்ஞான புனைக்கதைப் போட்டி பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளதோடு இதற்கான வழிகாட்டி ஆசிரியராக இ.ருத்சலினி ஆசிரியை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதீயில் போட்டியிட தகுதி
Reviewed by Editor
on
November 25, 2022
Rating: