(அலுவலக செய்தியாளர்)
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முகமாக வருமானம் குறைந்த மக்களுக்காக அரிய இன கருங்கோழிக்குஞ்சுகளை அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையினரால் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று (4) வெள்ளிக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் அவர்களின் வழிகாட்டலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதாகரன் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இத்திட்ட இணைப்பாளரும், அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினருமான என்.ரீ.மசூர் (சமுர்த்தி முகாமையாளர்), பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
நாவிதன்வெளியில் அரிய இன கருங்கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு
Reviewed by Editor
on
November 04, 2022
Rating: