(றிஸ்வான் சாலிஹு)
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷனை நிறைந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டிற்குரிய வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் இன்று (14) புதன்கிழமை அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜே.எம்.நிஃமதுல்லாஹ் கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், கருத்திட்ட உதவியாளர் எம்.ஐ.முஹாஜீர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் இதில் கலந்து கொண்டனர்.
வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான விதைப்பொதிகள் வழங்கல்
Reviewed by Editor
on
December 14, 2022
Rating:
