(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
வரலாற்றுச் சிறப்புமிக்க மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரத்தை இன்று ஜனாதிபதி மன்னார் பேராயரிடம் கையளித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) செவ்வாய்க்கிழமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புனித பூமியாக பிரகடணப்படுத்தும் உறுதிப்பத்திரம் கையளிப்பு
Reviewed by Editor
on
October 29, 2019
Rating:
Reviewed by Editor
on
October 29, 2019
Rating:

