மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை மூவர் மரணம்



(க.ஷியா)

மடகாஸ்கர் நாட்டில் ஏற்பட்ட கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இன்று (02) பலியாகியுள்ளனர்.

மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற  பிரதேசத்திற்கு  இவர்கள் கார் ஒன்றில் சென்ற வேளையிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் மூவரும் சென்ற கார் நீர் ஓடையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள வேளையில் இந்த விபத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இதுவரையில் இரண்டு பேரின் ஜனாஸா மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் இலங்கை கண்ணனந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவ்பர்
மற்றும் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த ரிஸான் மெளலானா என்பவர்களே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்கள்.

மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை மூவர் மரணம் மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கை மூவர் மரணம் Reviewed by Editor on November 02, 2019 Rating: 5