முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று (5) கூடி எடுத்த தீர்மானத்தையே அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
ஜனவரி 3 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசாவை சபாநாயகர் நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக்க ரணில் பச்சைக் கொடி!!! சபாநாயகருக்கு ஐ.தே.க. கடிதம்
Reviewed by Editor
on
December 05, 2019
Rating:
