கடலரிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்


ஒலுவில் கடல் நீர் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்தி, கடலரிப்பு ஏற்படாமல் அதற்கு வேண்டிய உடனடி திட்டங்களை செய்யுமாறு கோரி இன்று (24) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒலுவிலில் இடம் பெற்றுள்ளது.

ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபையின் ஒத்துழைப்புடன் ஒலுவில் பிரதேசத்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அரசே ஒலுவில் கடலரிப்புக்கு உடனடியாக தீர்வைக் கொடுங்கள் என்ற பல்வேறு பட்ட கோசத்துடன் இந்த அமைதி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
கடலரிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒலுவிலில் ஆர்ப்பாட்டம் கடலரிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒலுவிலில் ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on January 24, 2020 Rating: 5