பொத்துவிலில் தடை நீக்கப்பட்டுள்ளது


பொத்துவில் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் மாடறுக்கவோ வாங்கவோ விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது என்று பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கால்நடை வைத்திய அதிகாரியினால் மாடுகளுக்கு தொற்றுநோய் ஏற்படவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மாடு அறுப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் மாடறுக்கவோ அதனை விற்பனை செய்யவோ முடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலில் தடை நீக்கப்பட்டுள்ளது பொத்துவிலில் தடை நீக்கப்பட்டுள்ளது Reviewed by Editor on February 01, 2020 Rating: 5