நேற்று (20) வியாழக்கிழமை கட்டாரில் காலம்சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆதம் பாவா முஹம்மத் ஆஸிம் அவர்களின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை (21) ஜும்மா தொழுகையுடன் கட்டார் அபூஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மர்ஹூம் ஆஸிம் கட்டாரில் உள்ள அவரது பிள்ளைகளுடன் சந்தோஷமாக சில நாட்களை விடுமுறையில் கழிப்பதற்கு சென்ற வேளையிலே மாரடைப்பால் நேற்று கட்டாரில் காலமானார்.
இவரது ஜனாஸா நல்லடக்கத்தில் அக்கரைப்பற்று மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று ஆஸிம் அவர்களின் ஜனாஸா கட்டாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது, வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
Reviewed by Editor
on
February 21, 2020
Rating:
Reviewed by Editor
on
February 21, 2020
Rating:
