இரண்டாம் தவணை மே 11இல் ஆரம்பம்


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளைகளையும் இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணை இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளில் முதற்கட்டமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.இந்த விடுமுறை  மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காக நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு சம்பந்தமான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டும் வருகின்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணை மே 11இல் ஆரம்பம் இரண்டாம் தவணை மே 11இல் ஆரம்பம் Reviewed by Editor on April 11, 2020 Rating: 5