எண்ணெய்த் தாங்கியில் வீழ்ந்து ஒருவர் பலி..!


கொலன்னாவ எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் இன்று (14) செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

எண்ணெய் தாங்கியின் கொள்ளளவை அளப்பதற்காக ஏறிய குறித்த நபர், அதிலிருந்து தவறி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார். 

54 வயதான இவர், கட்டுகொட, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எண்ணெய்த் தாங்கியில் வீழ்ந்து ஒருவர் பலி..! எண்ணெய்த் தாங்கியில் வீழ்ந்து ஒருவர் பலி..! Reviewed by Editor on April 14, 2020 Rating: 5