மன்னாரில் இரு பெண்கள் விபத்தில் பலி


இன்று (09) வியாழக்கிழமை ஊடரங்கு தளர்த்தப்பட்டிருந்த வேளையில் மன்னாரில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து நானாட்டான் நோக்கி ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்கள் மீது, மன்னாரில் இருந்தே சென்ற தனியார் ஒருவருக்கு சொந்தமான கெப் ரக வாகனம் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலும்,மற்றவர் மன்னார் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளார்கள்.

மன்னார் பறப்பாங்கண்டல், 10ஆம் கட்டை சந்தியிலே இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில்
மன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இரு பெண்கள் விபத்தில் பலி மன்னாரில்  இரு பெண்கள் விபத்தில் பலி Reviewed by Editor on April 09, 2020 Rating: 5