பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நிந்தவூர் ஹஸன் நியமனம்.


கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நிந்தவூரைச் சேர்ந்த பி. ரீ.ஏ. ஹஸன் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அரச சார்பற்ற பல்கலைக்கழகமொன்றின் பதிவாளராக கடமையாற்றுவதோடு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பலகலைக்கழகங்களின் முன்னாள் பேரவை உறுப்பினரும், பல தனியார் வர்த்தக நிறுவனங்களினது வர்த்தக அபிவிருத்தி ஆலோசகராகவும் 

ஸ்ரீ் ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின்
பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுமானிப்பட்டத்தினை கொண்டுள்ள இவர்  வொல்வர்கம்ரன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நிந்தவூர் ஹஸன் நியமனம். பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நிந்தவூர் ஹஸன் நியமனம். Reviewed by Editor on May 18, 2020 Rating: 5