கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் மே 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை (4) காலை 5.00மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் 4ஆம் திகதி இரவு முதல் 6 ஆம் திகதி காலை தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.
மீண்டும் இந்த ஊடரங்கு 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகி எதிர்வரும் 11ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல்
Reviewed by Editor
on
May 01, 2020
Rating:
Reviewed by Editor
on
May 01, 2020
Rating:
