கொழும்பு, கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இந்த இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் சனிக்கிழமை (23) இரவு 8:00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம், செவ்வாய்க்கிழமை (26) காலை 5:00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஞாயிறு (24) மற்றும் திங்கட்கிழமை (25)ஆகிய இரு முழு நாள் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
Reviewed by Editor
on
May 22, 2020
Rating:
