மக்கள் அச்சமடையத் தேவையில்லை....


(எஸ்.தஸ்தகீர்)

தற்போது கல்முனை பிராந்திய கரையோரப்பிரதேசங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் இப்பிரதேச மக்கள் களபரம் அடைந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அனர்த்த முகாமைத்துவ உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது இந்நிலமை சில சந்தர்ப்பங்களில் சாதாரணமாக ஏற்படுவது வழமையான ஒன்றாகும்.

எனவும் கடல் நீர்  மட்டம் பணிவதால் கிணறுகளின் நீர் மட்டம் பணிவதாகவும் இது சாதாரணமாக உயர்வடையும் போது கிணறுகளின் நீர் மட்டமும் சாதாரண நிலைக்கு வரும் எனவும் இதற்கும் சுனாமிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் இது பற்றி பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனவே பொது மக்கள் எக்காரணம் கொண்டும் அடையத்தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அச்சமடையத் தேவையில்லை.... மக்கள் அச்சமடையத் தேவையில்லை.... Reviewed by Editor on May 15, 2020 Rating: 5