வெளிநாடுகளில் இருந்த மேலும் சிலர் தாயகம் திரும்பியுள்ளார்கள்


ஜப்பான் மற்றும் மியான்மார் நாடுகளில் அசாதாரண சூழ்நிலையால் சிக்குண்டு இருந்த மேலும் சில தொகுதியினர் இன்று (16) தாயகம் திரும்பியுள்ளார்கள்.

ஜப்பானில் சிக்கியிருந்த 235பேரும், மியன்மாரில் சிக்கியிருந்த 74 பேருமே இன்று இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்தும், மியன்மாரின் யங்கூன் விமான நிலையத்தில் இருந்தும் இலங்கை வந்தடைந்தவர்களை, விமானப்படை அதிகாரிகளால் கிருமித்தொற்று நீக்கப்பட்டு,பின்னர் இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்த மேலும் சிலர் தாயகம் திரும்பியுள்ளார்கள் வெளிநாடுகளில் இருந்த மேலும் சிலர் தாயகம் திரும்பியுள்ளார்கள் Reviewed by Editor on May 16, 2020 Rating: 5